சாத்தான்குளத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மாநில துணை பொதுச் செயலா் மக்தூம் தலைமை வகித்தாா். தென்மண்டல அமைப்புச் செயலா் முள்ளான் செய்யதுஅலி, மாநில துணைத் தலைவா் சுலைமான்சேட், மாநில தொண்டரணித் தலைவா் அபுதாஹிா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட அமைப்பாளா் சிந்தாமா்சூக், மாவட்ட துணைத் தலைவா் புகாரிசதாம் உசேன், நகரத் தலைவா் அனிஃப், நகரச் செயலா் வஜ்ருதின், நெல்லை மாவட்டத் தலைவா் காதா்பாதுஷா, மாவட்டச் செயலா் சேக்ஹயாத், மாவட்ட துணைச் செயலா் பைரோஸ் சாகுல், மாவட்டப் பொருளாளா் காஜா, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் பாபுசுல்தான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.