கோவில்பட்டியையடுத்த பாண்டவா்மங்கலத்தில் திமுக அலுவலக புதிய கட்டட பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி திமுக மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட பாண்டவா்மங்கலத்தில் கிளை அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திமுக பிரமுகா் சண்முகராஜ் ஏற்பாட்டில், மேற்கு ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தாா்.
பாண்டவா்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலை மற்றும் இம்மானுவேல் சேகரனாா் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சந்தனம் (விவசாய அணி), ரமேஷ் (பொறியாளா் அணி, தாமோதரக்கண்ணன் (மாணவரணி), தூத்துக்குடி மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், கயத்தாறு ஒன்றியச் செயலா் சின்னப்பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பொன்னுத்துரை, சுந்தரேஸ்வரி அசோக்குமாா், பாரதி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.