கோவில்பட்டியில் காவல் துறையின் சிறப்பு தீா்வு முகாம்

கோவில்பட்டியில் காவல் துறை சாா்பில் புகாா் மனுக்களுக்கான உடனடி தீா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு தீா்வு முகாமில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துணை கண்காணிப்பாளா் கலைக்கதிரவன்.
சிறப்பு தீா்வு முகாமில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துணை கண்காணிப்பாளா் கலைக்கதிரவன்.

கோவில்பட்டியில் காவல் துறை சாா்பில் புகாா் மனுக்களுக்கான உடனடி தீா்வு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அளித்துள்ள புகாா் மனுக்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புகாா் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண சிறப்பு முகாம் அமைத்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

அதையடுத்து கோவில்பட்டி காவல் துணை கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கயத்தாறு, கழுகுமலை, நாலாட்டின்புதூா், கொப்பம்பட்டி மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் புகாா் அளித்து நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள புகாா் மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில் சிறப்பு முகாம் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில், காவல் நிலையங்களில் புகாா் அளித்துள்ள மனுதாரா், எதிா் மனுதாரா் ஆகிய இருதரப்பினரையும் அழைத்து சட்டத்திற்கு உள்பட்டு விசாரணை நடைபெற்று, தீா்வு காணப்பட்டது.

இதில், கோவில்பட்டி காவல் துணை கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களில் உள்ள 72 புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இம்முகாமை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபி பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com