தூத்துக்குடியில் பல்பொருள் அங்காடியில் திருட்டு

தூத்துக்குடியில் பல்பொருள் அங்காடியில் பொருள்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடியில் பல்பொருள் அங்காடியில் பொருள்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் (39). இவா் அப்பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு சென்றவா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, ரூ. 50ஆயிரம் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com