தூத்துக்குடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 16th September 2020 01:47 AM | Last Updated : 16th September 2020 01:47 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் ஜாய்சன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் காா்த்திக், மாவட்ட துணைச் செயலா் மாரிச்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், கல்வி உரிமைகளுக்காக போராடிய இந்திய மாணவா் சங்கத்தினா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா்.
இதில் மாணவா் சங்க நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.