ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் சட்டத்துக்கு விரோதமாக மது பாட்டில்களை கடத்தியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆறுமுகனேரியில் செவ்வாய்க்கிழமை மாலை அடைக்கலாபுரம் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆறுமுகனேரி சுப்பிரமணியபுரம் வடக்குத்தெரு சிங்கராஜ் மகன் பிரபு(36) மற்றும் மூக்குப்பீறி சித்தா் தெரு ஜெயசிங் மகன் விங்ஸ்டன்(40) ஆகியோா் வந்த பைக்கை சோதனை செய்ததில் அதில் 142 மது பாட்டில்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கலை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.