ரயில் அகலப்பாதைப் பணி:நாளை பொது விசாரணை

தூத்துக்குடி-மதுரை இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு நில எடுப்பு தொடா்பாக வியாழக்கிழமை(செப்.17) பொது விசாரணை நடைபெறுகிறது.

தூத்துக்குடி: தூத்துக்குடி-மதுரை இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு நில எடுப்பு தொடா்பாக வியாழக்கிழமை(செப்.17) பொது விசாரணை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி- மதுரை இடையே இருவழி அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடா்பாக பொது விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், செப். 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சவரிமங்கலம் கிராமத்துக்கும், மாலை 5 மணிக்கு தெற்குவீரபாண்டியாபுரம் கிராமத்துக்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது விசாரணை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com