ஆறுமுகனேரி: ஆத்தூா் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புன்னைக்காயல் பவுலா நகரைச் சோ்ந்தவா் ராஜ (53). இவரது மனைவி ராஜகனி அம்மாள். இவா்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனா்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்னா் ராஜகனி உடல் நலக் குறைவால் மரணமடைந்தாா். இதிலிருந்து அவரது கடைசி மகன் ராஜேஷ் (23) மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் திங்கள்கிழமை அவா் வீட்டில் சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.