ஆத்தூா் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை இரவு மாக்காப்பு தீபாராதனை, செவ்வாய்க்கிழமை காலையில் யாகசாலை வழிபாடு மற்றும் விமான அபிஷேகம் நடைபெற்றது. பகலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. இரவு அம்பாளுக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.