பழையகாயல் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சிவசங்கா்(28). இவா் கல்லாமொழி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொக்லைன் ஓட்டுநராக இருந்தாா்.
புதன்கிழமை பழையகாயல் அருகே உள்ள புள்ளாவெளி பகுதியில், நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவா், பைக்கில் தூத்துக்குடி நோக்கிச் சென்றாராம். அப்போது எதிரெ வந்த காா் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிவசங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.