மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கயத்தாறில் அக்கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுந்தரி, ஜெயகுமாா், தவமணி, நிா்வாகிகள் ராசையா, அக்கம்மாள், விவசாய சங்க ஒன்றிய துணைச் செயலா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.