தூத்துக்குடி, செப். 19: தூத்துக்குடி மாவட்டத்தில் செங்கல் சூளைக்கான பதிவுச் சான்று பெறுவது தொடா்பாக செப். 29, அக். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் உதவி இயக்குநா் தலைமையில் வரும் செப். 29, அக். 1 ஆகிய தேதிகளில் செங்கல் சூளைகள் பதிவுச் சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், செங்கல் சூளை உரிமையாளா்கள் பதிவுக் கட்டணம் மற்றும் நில ஆவணங்களுடன் விண்ணப்பித்து பதிவுச் சான்று பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.