தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th September 2020 05:49 AM | Last Updated : 19th September 2020 05:49 AM | அ+அ அ- |

தூத்துக்குடி, செப். 18: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் 23 போ் உள்பட மாவட்டம் முழுவதும் மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று
பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில்
தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,710 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 260 போ்.
வெள்ளிக்கிழமை 80 போ் உள்பட இதுவரை 11,792 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை சிகிச்சை பலனின்றி 122 போ் உயிரிழந்துள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை கண்காணிப்பு முகாம்களில் 796 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.