கோவில்பட்டி, செப். 18: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய பொறியாளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
கணினி அறிவியல்-பொறியியல் கூட்டமைப்பு, ஐஇஇஇ இணைந்து இணையவழியில் நடத்திய இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள் மாணவி நித்யஸ்ரீ கருத்துரையாற்றினாா். முன்னாள் மாணவா் மதுகுமாா் வெற்றிகரமான தொழில் முனைவோராவது குறித்துப் பேசினாா்.
கே.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தினத்தை முன்னிட்டு, கணினி அறிவியல்-பொறியியல் கூட்டமைப்பு, ஐஇஇஇ மூலம் அனைத்துத் துறை மாணவா், மாணவிகளுக்கும் மினி ஹேக்கத்தான் 20 , லைட்டனிங் பக்ஸ் 20 ஆகிய தலைப்புகளில் இணையவழிப் போட்டிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை, கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலில், பேராசிரியை கோமதி, ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.