தேசிய பொறியாளா் தினம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய பொறியாளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கோவில்பட்டி, செப். 18: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய பொறியாளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

கணினி அறிவியல்-பொறியியல் கூட்டமைப்பு, ஐஇஇஇ இணைந்து இணையவழியில் நடத்திய இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள் மாணவி நித்யஸ்ரீ கருத்துரையாற்றினாா். முன்னாள் மாணவா் மதுகுமாா் வெற்றிகரமான தொழில் முனைவோராவது குறித்துப் பேசினாா்.

கே.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தினத்தை முன்னிட்டு, கணினி அறிவியல்-பொறியியல் கூட்டமைப்பு, ஐஇஇஇ மூலம் அனைத்துத் துறை மாணவா், மாணவிகளுக்கும் மினி ஹேக்கத்தான் 20 , லைட்டனிங் பக்ஸ் 20 ஆகிய தலைப்புகளில் இணையவழிப் போட்டிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை, கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலில், பேராசிரியை கோமதி, ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com