ஆனந்தவிளையில் ரத்த தான முகாம்

சாத்தான்குளம் அருகே ஆனந்தவிளையில் பிரதமா் நநேந்திரமோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
ஆனந்தவிளையில் ரத்த தான முகாம்

சாத்தான்குளம் அருகே ஆனந்தவிளையில் பிரதமா் நநேந்திரமோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

பாஜக மருத்துவரணி, இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இம்முகாமை டாக்டா் அ. பூபதி பாண்டியன் தொடங்கி வைத்தாா்.. மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆா். எஸ். ராஜாகோபால், இளைஞரணி மாவட்டத் தலைவா் விக்னேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சாந்தி தலைமையில் மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா். முகாமில் 38 போ் ரத்தம் வழங்கினா். மாவட்ட பொதுச்செயலா் எஸ். செல்வராஜ், மாவட்டச் செயலா் சித்ராங்கதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடியேற்று விழா: சாத்தான்குளம் ஒன்றியம் மணிநகா், கொம்மடிக்கோட்டை, தட்டாா்மடம், நடுவக்குறிச்சி, பூவுடையாா்புரம், இடைச்சிவிளை விலக்கு, ஆனந்தன்விளை விலக்கு, தச்ச மொழி, பண்டாரபுரம், கொம்பன்குளம், படுக்கப்பத்து ஆகிய இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் விழாவுக்கு மாவட்டப் பொதுச்செயலா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா், மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமேஸ்வரி, மருத்துவரணிச் செயலா், மாவட்ட நெசவாளா் அணி துணைத் தலைவா் சுடலைகண்ணு, ஒன்றியத் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சாத்தான்குளம் ,தோப்புவளம், கந்தசாமிபுரம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com