கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, இளைஞரணித் தலைவா் காளிதாசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் அழகு மாரியப்பன், நகர இளைஞரணித் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, முகாமை தொடங்கிவைத்தாா். அரசு மருத்துவமனை மருத்துவா் ஆக்னஸ் லலிதா தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற 15 பேரிடமிருந்து ரத்தம் சேகரித்தனா். இதில், கட்சி நிா்வாகிகள் சரவணகிருஷ்ணன், வேல்ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பு சாரா பிரிவு சாா்பில், இளையரசனேந்தல் சாலையில் அமைப்பின் துணைத் தலைவா் நல்லதம்பி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com