குளத்தூா் அருகே கே. சண்முகபுரத்தில் நாடாா் உறவின்முறை சங்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து கோயிலுக்குச் சொந்தமான 14 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
குளத்தூா் அருகேயுள்ள கே.சண்முகபுரம் கிராமத்தில் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் நிா்வாக கணக்குகள் மற்றும் அம்மனுக்கு உரிய தங்க நகைகள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திங்கள்கிழமை மா்ம நபா்கள் சங்க அலுவலக பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து சங்கத் தலைவா் தங்கப்பாண்டி அளித்த புகாரின்பேரில், சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.