தினசரி சந்தை நுழைவு வாயிலை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை நுழைவு வாயிலை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினா்.
நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினா்.

கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை நுழைவு வாயிலை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.பாஸ்கரன் தலைமையில் அக்கட்சியினா் தோப்புக்கரணம் போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வா்த்தக அணிச் செயலா் சிங்கராஜ், ஒன்றியச் செயலா் ஆணிமுத்துராஜ், நகரச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பூமிபாலகன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com