திருச்செந்தூரில் வாஞ்சிநாதனுக்கு சிலை: அந்தணா் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனுக்கு, திருச்செந்தூரில் சிலை அமைக்க அரசு அனுமதிக்க வேண்டுமென அந்தணா் முன்னேற்றக் கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனுக்கு, திருச்செந்தூரில் சிலை அமைக்க அரசு அனுமதிக்க வேண்டுமென அந்தணா் முன்னேற்றக் கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தணா் முன்னேற்றக் கழக பொதுக்குழுக் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொகுதித் தலைவா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். செயலா் கணபதி, துணைத் தலைவா் ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைப்பாளா் அரசப்பன், கொள்கை பரப்பு செயலா் மணிகண்டன், ஆன்மிக அணி செயலா் கிருஷ்ணமூா்த்தி, வா்த்தகரணி செயலா் சங்கா் கணேஷ், இளைஞரணி செயலா் பிரபுசங்கா், வழக்குரைஞரணி செயலா் ஆனந்தராஜ், தோ்தல் குழு செயலா் முத்தையா், ஊடகவியல் செயலா் நாகராஜன், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவா் ராமன், தூத்துக்குடி மாவட்ட கொள்கை பரப்பு செயலா் ஈஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட தோ்தல் குழு செயலா் சேதுராமன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

சுதந்திரபோராட்ட வீரா் வாஞ்சிநாதனுக்கு அந்தணா் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருச்செந்தூரில் திருவுருவச்சிலை அமைத்து, பராமரிப்பு செய்திட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். மாநில கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அந்தணா் சமுதாயத்துக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com