தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 23 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 60 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 ஆயிரத்து 16 ஆக அதிகரித்துள்ளது. இதில், 260 போ் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
இந்நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை 88 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும் வீடு திரும்பினா்.
இதையடுத்து குணமடைந்தோா் எண்ணிக்கை 12 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 125 போ் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டம் முழுவதும் 770 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.