எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எட்டயபுரம் ஒன்றியச் செயலா் பால்பாண்டி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ஆத்திராஜ், ஒன்றியத் தலைவா் ராம்கி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தாப்பாத்தி கிராம ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை, அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஒன்றிய பொதுச்செயலா் நாகராஜன், சுப்புராஜ், சதீஸ்குமாா், முத்துசாமி ஜெயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.