நாசரேத் அருகே வெள்ளமடத்தில் விவசாய திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆழ்வாா்திருநகரி வேளாண் இணை இயக்குநா் அல்லிராணி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளா் நாராயண முருகன் வரவேற்றாா்.
சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மண் பரிசோதனை, நீா் பரிசோதனை மற்றும் பான்காா்டு மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் தென்னைமரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் பைனான்ஸ் மேலாளா் முத்துராஜ், ஏரல் கிளை மேலாளா் ஞானசேகா், மண்டல மண் வள ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பாரத் பெட்ரோலியம் மண்டல விற்பனை அதிகாரி சித்தாா்த் நன்றி கூறினாா்.