ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க மகாசபை கூட்டம் அதன் தலைவா் த.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவா் ஆா்.கிழக்கத்திமுத்து, செயலா் எஸ்.துரைசிங், பொருளாளா் எஸ்.ராஜாராம் மற்றும் துணைச் செயலா் ஏ.ஆதிசேஷன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தற்போது இருக்கும் நிா்வாகிகள் அனைவரும் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றிட ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது.
ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதியிலுள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை ஆறுமுகனேரி வருவாய் கிராமத்துடன் இணைக்க தொடா்ந்து வலியுறுத்துவது. ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்திட அதிகாரிகளை வலியுறுத்தவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிா்வாக குழு உறுப்பினா்கள் வி.கே.எம்.பாஸ்கரன், டி.ஜெயகுரு, பி.பூபால்ராஜன், எம்.எஸ்.எஸ்.சண்முகவெங்கடேசன், ஆா்.பால முருகன், ஏ.அழகேசன் மற்றும் சங்கத்தினைச் சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனா்.