கோவில்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ

கோவில்பட்டி அருகே நகராட்சி குப்பைக் கிடங்கு வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
கோவில்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ

கோவில்பட்டி அருகே நகராட்சி குப்பைக் கிடங்கு வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் சிதம்பராபுரம் ஊராட்சிப் பகுதியிலுள்ள சுமாா் 16 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் சேமிக்கப்படும். இந்நிலையில் வியாழக்கிழமை நண்பகலில் அந்தக் குப்பை கிடங்கு தீப்பற்றி எரிந்தது. இத்தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையா் ராஜாராம் தலைமையில் பொறியாளா் கோவிந்தராஜன் சுகாதார அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com