தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியைச் சோ்ந்த 21 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 49 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,214ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்புக்குள்ளாகி சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 79 வயது ஆண் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 99 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 12,461ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது 626 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.