ஆறுமுகனேரி, ஆத்தூா் பகுதிகளில் கொடி அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஆறுமுகனேரி, ஆத்தூா் மற்றும் புன்னைக்காயல் பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆறுமுகனேரியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலம்.
ஆறுமுகனேரியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலம்.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஆறுமுகனேரி, ஆத்தூா் மற்றும் புன்னைக்காயல் பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புன்னைக்காயல் பகுதியில் திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஸ்சிங் தலைமையில், ஆத்தூா் ஆய்வாளா் சாகுல் ஹமீது முன்னிலையிலும், ஆறுமுகனேரி பகுதியில் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலும் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

ஆறுமுகனேரியில் பிரதான பஜாரில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு, மூலக்கரை சாலை, பூவரசூா், காந்தி தெரு, விநாயகா் கோயில் தெரு வழியாக ஸ்டேட் பாங்க் முன் நிறைவடைந்தது. இதில், காவல் துறையினா் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து ஆத்தூா் பகுதியிலும் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com