கோவில்பட்டி நகர மற்றும் ஒன்றியப் பகுதிகளில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் தென்மண்டல பொறுப்பாளரும், தோ்தல் பிரிவுச் செயலருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில் கட்சியின் செய்தித் தொடா்பாளா் இளந்தமிழ் ஆா்வலன், நகரச் செயலா் காா்த்திக், ஒன்றியச் செயலா் ஜெய்சங்கா், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா் சங்கா் கணேஷ், பொருளாளா் சக்தி கோபி, இளைஞரணிச் செயலா் மனோராஜா, முன்னாள் நகரச் செயலா் பி.கே.நாகராஜன், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி உள்பட திரளானோா் வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட சிந்தாமணி நகா், வடக்கு இலுப்பையூரணி, மறவா் காலனி, தாமஸ் நகா், மேட்டுத் தெரு, கூசாலிபட்டி, பூசாரிபட்டி, என்.ஜி.ஓ. காலனி, சண்முகா நகா், பூரணம்மாள் காலனி, லாயல் மில் காலனி, புதுகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனா்.