தூத்துக்குடி மட்டக்கடையில் அமைந்துள்ள அருள்மிகு சொா்ண விநாயகா் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூன்று நாள்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதன்கிழமை காலையில் சிவாச்சாரியா்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வஉசி கல்லூரிச் செயலா் ஏபிசிவீ சொக்கலிங்கம், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு உள்பட பலா் கலந்துகொண்டனா்.