திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் பஞ்சாமிா்தம் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி, இக்கோயில் சாா்பில் ஏற்கெனவே லட்டு, முருக்கு உள்ளிட்ட பிரசாதப் பொருள்கள் தயாா் செய்யப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு, அரைகிலோ ரூ. 50-க்கு பக்தா்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் வகையில், அதன் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மூலவருக்கு பஞ்சாமிா்தம் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு கோயில் செயல் அலுவலா் பா.விஷ்ணுசந்திரன் இலவசமாக வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.