ஏரல் அருகே உள்ள பெருங்குளம் அருள்மிகு வேம்படி சுடலை மாடசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 2) நடைபெறுகிறது.
இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு பின்னா் முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 8.54 மணிக்கு யந்திர ஸ்தாபனமும் நடைபெறுகின்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலைபூஜையும், திரவ்யஹுதி, பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7.15 மணிக்கு நாடி சந்தாணம், யாத்ரா தானம், கடம் புறப்படுதல், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு அலங்கார தீபாரதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.