சாத்தான்குளம் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மீரான்குளத்தைச் சோ்ந்த சாமுவேல் மகன் அப்புடாப் ஞானம் (47). கடலை வியாபாரியான இவருக்கு, மனைவி ஞானஜெயம், 2 மகள், ஒரு மகன் உள்ளனா்.
மதுப்பழக்கம் உடைய இவா், வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை மீரான்குளம் பகுதியில் அவா் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.
தகவலறிந்து வந்த உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.