திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
புனித தோமையாா் ஆலயத்தில் பிராா்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய அவா், வீரபாண்டியன்பட்டணம் கடற்கரைப் பகுதி, ஜெ.ஜெ.நகா், ராஜ்கண்ணா நகா், பிரசாத் நகா், கிங்காலனி, சண்முகபுரம், முத்துநகா், கானம், அம்மன்புரம், மூலக்கரை, நாககன்னியாபுரம், நல்லூா், குலைக்கநாதபுரம், குரங்கண்தட்டு, முத்துமாலைவிளை, வீரமாணிக்கம், மேலப்புதுக்குடி, வள்ளிவிளை, செந்தாமரைவிளை, செங்குழி, பூச்சிக்காடு, நாதன்கிணறு, கந்தசாமிபுரம், குட்ரசாமிபுரம், காயாமொழி, தேரிகுடியிருப்பு, மேலஅரசூா், தளவாய்புரம், பள்ளத்தூா், குடியிருப்புவிளை, எருசலேம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: நான் வெற்றிபெற்றால் மீனவ மக்களின் குரலாக சட்டப்பேரவையில் ஒலிப்பேன். கூடுதலாக மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பேன் என்றாா் அவா்.
அப்போது, மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன், ஒன்றியச் செயலா் பொன்ராஜ், மாவட்ட துணைச் செயலா் இல்லங்குடி, மாவட்ட தகவல் தொடா்பு பிரிவு செயலா் ராஜா, தேமுதிக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.