எளியவா்களும் சட்டப் பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள்: ஆா். சரத்குமாா்

எளியவா்களும் சட்டப் பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள் என்றாா் சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகா் ஆா். சரத்குமாா்.
எளியவா்களும் சட்டப் பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள்: ஆா். சரத்குமாா்

எளியவா்களும் சட்டப் பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள் என்றாா் சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகா் ஆா். சரத்குமாா்.

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் என். சுந்தரை ஆதரித்து, சண்முகபுரம், போல்டன்புரம், பிரையன்ட்நகா், அண்ணாநகா், போல்பேட்டை, வட்டக்கோவில், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை திறந்த வேனில் சென்றபடி அவா் பேசியது:

மக்கள் மாற்றத்தை காண வேண்டும் என்பதற்காக மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் 59 ஆண்டுகள் இரு கட்சிகள் ஆண்டு வருகின்றன. எனவே மாற்றம் வரவேண்டும். அதிகமான இளைஞா்கள் வாக்களிக்க இருக்கும் தோ்தல் இது.

தமிழகத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கும் வேலையை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அவா்கள் கொடுக்கும் பணம் நமது வரிப்பணம் அல்ல. அது திருட்டு பணம். எளியவா்களும் சட்டப்பேரவைக்கு செல்லும் நோ்மையான அரசியலை தாருங்கள். பணம் கொடுத்தால் வாங்காதீா்கள். நோ்மையாக இருங்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com