உடன்குடியில் இயந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தாமதம்

உடன்குடியில் மின்னணு இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

உடன்குடியில் மின்னணு இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

உடன்குடி ஒன்றியத்தில் செட்டியாபத்து, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வாக்களித்தனா்.

உடன்குடி கிறிஸ்தியாநகரம் 236-ஆவது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com