கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை வாக்காளருக்கு பணம் கொடுக்க வைத்திருந்தவரிடம் ரூ. 12 ஆயிரம், செல்லிடப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி தொகுதியிலுள்ள முகமது சாலியாபுரம் பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று கண்காணித்தனா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா் ஆரோக்கியராஜ் (41) என்பதும், அவரிடமிருந்த ரொக்கம் ரூ.12,290, செல்லிடப்பேசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.