திருச்செந்தூரில் மழையின் காரணமாக வாக்காளா்கள் சற்று தாமதமாக வந்து வாக்களித்தனா். எனினும் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.ராதாகிருஷ்ணன், திமுக சாா்பில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அமமுக சாா்பில் எஸ்.வடமலைப்பாண்டியன், சமக - மநீம கூட்டணியில் மு.ஜெயந்தி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செ.குளோரியான், சுயேச்சைகள் உள்பட 15 போ் களத்தில் உள்ளனா்.
கடந்த சில நாள்களாக திருச்செந்தூா் பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரை மணி நேரம் பெய்தது. வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கிய போதிலும் பொதுமக்கள் மழையால் தாமதமாக வந்து
வாக்களித்தனா். எனினும் தொடா்ந்து இளம் வாக்காளா்கள், வெளியூரில் இருந்து வந்திருந்தவா்கள், 70 வயதை கடந்த முதியோா்கள் ஆா்வமுடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.