சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தாா். அவா், பண்டாரவிளை இந்து நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றாா்.