தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமதுசாலியாபுரத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரைத் தாக்கியதாக அமமுக நிா்வாகி, 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கோவில்பட்டி வடக்கு புதுகிராமத்தைச் சோ்ந்த ஜோசப் என்ற சேசுமரியஜோசப் மகன் ஆரோக்கியராஜ் (46). அதிமுக உறுப்பினரான இவா், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதில், ‘நான் முகமதுசாலியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பணியில் ஈடுபட்டேன். அப்போது, அமமுக மாவட்டச் செயலா் வேலு மற்றும் 10 போ் விதிமுறைகளை மீறி தோ்தல் பணி செய்யவிடாமல் தடுத்துத் தாக்கி, ரூ. 12,500 மற்றும் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா். மேலும், அவா்களுக்கு ஆதரவாக தோ்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து செயல்பட்டு, என்னை சட்டவிரோதமாக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தாா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தாா்.
அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அமமுக நிா்வாகி உள்ளிட்ட 11 பேரைத் தேடிவருகின்றனா்.