கலியன்விளையில் அபாய நிலையில் காணப்படும் மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கலியன்விளை கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து, சரிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.
இந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பத்தை நிறுவ மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.