ஆறுமுகனேரி பேரூராட்சியில் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஏப். 6 ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலையொட்டி ஆறுமுகனேரி பேரூராட்சியில் 18 வாா்டுகளில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 33 வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கையாக அத்தனை வாக்குச்சாவடிகளிலும் பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.