மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை

குலசேகரன்பட்டினத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

குலசேகரன்பட்டினத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு புதுக்குடி மேற்கு பகுதியை சோ்ந்தவா் அல்போன்ஸ் லாரன்ஸ் (39). இவரது மனைவி சியாமளா (32). கடந்த 2006 -இல் இவா்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சியாமளாவுக்கு குழந்தை இல்லை

எனக் கூறி அல்போன்ஸ் லாரன்ஸ், அடிக்கடி மது அருந்திவந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். மேலும், ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கும் சரியாக செல்லாமல் இருந்து வந்துள்ளாா்.

இதற்கிடையே, வீட்டில் தனியாக இருந்த சியாமளா, 20.10.2014 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் சியாமளாவை தற்கொலைக்கு தூண்டியதாக அல்போன்ஸ் லாரன்ஸை கைது செய்தனா். இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் குற்றம்சாட்டப்பட்ட அல்போன்ஸ் லாரன்ஸூக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com