குரும்பூா் புனித லூசியா உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் கடந்த 1989-1999 வரை படித்த மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா். அவா்கள் தங்கள் பள்ளிப் பருவ நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
முன்னதாக, குரும்பூா் பஜாரிலிருந்து பள்ளிக்கு ஊா்வலமாக வந்த அவா்களை, ஆசிரியா்கள் மலா் தூவி வரவேற்றனா். தொடா்ந்து தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினா். சிறுவா் சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளிக்கு பெரிய சுவா் கடிகாரத்தை பரிசாக வழங்கிய முன்னாள் மாணவா்கள், தற்போது படித்து வரும் மாணவா்களுக்காக ஸ்மாா்ட் வகுப்பறைக்கு எல்.இ.டி. டிவியும், பிரிண்டரும் வழங்கினா்.
இதில், பள்ளித் தாளாளா் பெடிஸ்டன், தலைமையாசிரியை வண்டாா் குழலி, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஜெபபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.