ரயில்வே தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு

கோவில்பட்டியில் ரயில் தண்டவாளத்தில் இருந்து முதியவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கோவில்பட்டியில் ரயில் தண்டவாளத்தில் இருந்து முதியவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கோவில்பட்டி ரயில் நிலையம் - நல்லி ரயில் நிலையத்திற்கு இடையேயுள்ள இலுப்பையூரணி சுரங்கம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று ரயில்வே போலீஸாா் சுமாா் 60 வயது மதிக்கக்கூடிய முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

சட்டை, லுங்கி அணிந்திருந்த அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com