கபசுரக் குடிநீா், முகக் கவசம் அளிப்பு

விளாத்திகுளத்தில் காவல் துறை, வியாபாரிகள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

விளாத்திகுளத்தில் காவல் துறை, வியாபாரிகள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதையொட்டி, நடைபெற்ற கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு, காவல் துணை கண்காணிப்பாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ரமேஷ், உதவி ஆய்வாளா் காசிலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கரோனா பொது முடக்கம் தொடா்பாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது, இரவு நேர பொது முடக்கத்தின்போது வாடகை ஆட்டோ, காா் மற்றும் தனியாா் வாகன ஓட்டுநா்கள் அரசு விதிகளை பின்பற்ற வேண்டும். வணிகா்கள் தங்களது நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதில், வணிகா்கள் சங்க நிா்வாகிகள் தங்கசாமி, இளையராஜா மாரியப்பன், வாடகை ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை சாா்பில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com