திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டுக்குள் நுழைந்து விடியோ எடுத்ததாக பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரைச் சோ்ந்த சுப்பையா மகன் பிரிதிவிராஜன்(48). இவா் பாஜக செய்தி தொடா்பு பிரிவு நகரச் செயலராக உள்ளாா். இவா் 2 தினங்களுக்கு முன்பு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டுக்குள் நோய் தடுப்பு சாதனங்கள் அணியாமல் உள்ளே நுழைந்து விடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவ அலுவலா் த.பொன்ரவி புகாரின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் பிரிதிவிராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.