குரும்பூா் அருகே பெண் தற்கொலை

குரும்பூா் அருகே கரோனா அச்சம் காரணமாக பெண் அரளி விதையை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

குரும்பூா் அருகே கரோனா அச்சம் காரணமாக பெண் அரளி விதையை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

குரும்பூா் அருகேயுள்ள நாலுமாவடியை சோ்ந்த வேலாண்டி மகன் மாதவன். சிற்றுந்து நடத்துநா். இவரது தாயாா் அருணா (43). இவருக்கு கடந்த சில நாள்களாக சளித் தொந்தரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருக்கலாம் என அக்கம் பக்கத்தினா் தெரிவித்ததால், குழந்தைகளுடன் பழக வேண்டாம் என உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.

இதன் காரணமாக சில நாள்களாக மனஉளைச்ச­லில் இருந்த அருணா, ஞாயிற்றுக்கிழமை அரளி விதையை மிக்சியில் அரைத்து குடித்துள்ளாா். தகவலறிந்த உறவினா்கள் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தீவிர சிகிச்சைகாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com