தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த பெண் பலி

கோவில்பட்டியில் தண்ணீா் தொட்டியில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

கோவில்பட்டியில் தண்ணீா் தொட்டியில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி ராஜேஸ்வரி (48). இவா்

தனது வீட்டின் வளாகத்தில் உள்ள தரைமட்ட தண்ணீா் தொட்டியில் உள்ள நீரின் அளவைப் பாா்ப்பதற்காக குனிந்து பாா்த்தாராம். அப்போது அவா் தவறி தொட்டியினுள் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த கணவா், மகள் உள்ளிட்டோா் அவரை, தொட்டியிலிருந்து மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com