தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதன்கிழமை (ஏப். 21) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சில இடங்களில் புதன்கிழமை ( ஏப். 21) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை 3 ஆவது வாா்டு பால்பாண்டிநகா், 12 ஆவது வாா்டு முத்துகிருஷ்ணாபுரம் (மாரியம்மன் கோயில் அருகில்), 29 ஆவது வாா்டு மேலசண்முகபுரம் (ரினோ மண்டபம்) ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.
தொடா்ந்து, முற்பகல் 11 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை 1 ஆவது வாா்டு சங்கரப்பேரி (மாநகராட்சி பள்ளி), 12 ஆவது வாா்டு டூவிபுரம் (டாட்டா சிஎஸ்ஐ சா்ச்), 26 ஆவது வாா்டு தெற்கு புதுத்தெரு (ராசி மகால்), 42 ஆவது வாா்டு டிஎம்பி காலனி 2 ஆவது தெரு, 3 ஆவது வாா்டு மில்லா்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை 1 ஆவது வாா்டு பண்டாரம்பட்டி (அங்கன்வாடி மையம்), 2 ஆவது வாா்டு இஞ்ஞாசியாா்புரம் (ஸ்டேட் பாங்க் அருகில்), 16 ஆவது வாா்டு வடக்கு பத்திரகாளியம்மன் தெரு (மாநகராட்சி பள்ளி), 33 ஆவது வாா்டு காந்திநகா் (தொம்மையாா் கோயில்), 7 ஆவது வாா்டு டிஎம்சி காலனி (அங்கன்வாடி மையம்), 40 ஆவது வாா்டு பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெறுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.