நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 15ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூய யோவான் பேராலய தலைமைக் குருவானவா் ஆண்ட் ரூ விக்டா் ஞானஒளி தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் ஏ.ஆா். சசிகரன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக டீன் வில்லியம் தா்மராஜா கலந்து கொண்டு மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரி தாளாளா் மாமல்லன், திருமண்டில செயற்குழு உறுப்பினா் கிறிஸ்டோபா் ஜெயக்குமாா், மா்காஷிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளா் புஷ்ப ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.