பேய்க்குளம் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோயில் அருகில் இருந்து பேய்க்குளம் பிரதான வீதி, முனைஞ்சிப்பட்டி சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் காணப்படுகிறது. மேலும் பேய்க்குளம்- பனைக்குளம் செல்லும் சாலை, முனைஞ்சிபட்டி செல்லும் கடை வீதி அருகில் சாலையில் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் வருவோா் நிலை தடுமாறி கீழ விழும் நிலை உள்ளது. ஆகவே, இந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.